ஐ லவ் யூ அப்பா..!


●ஒரு அப்பாவும், 
  4 வயது மகனும் 
  அவர்களுடைய புதிய காரைத் 
  துடைத்துக்கொண்டிருந்தார்கள்.. 

●அப்பொழுது,  
  அந்த சிறுவன் 
  ஒரு சிறிய கல்லை எடுத்து,  
  காரின் கதவு பக்கத்தில் 
  சுரண்டி கொண்டிருந்தான்..  

●சத்தத்தைக் கேட்ட அப்பாவுக்கு 
  கோபம் தலைகேறியது..

●அவர் கடுப்பாகி,  
  மகனுடைய கையை பிடித்து, 
  நான்கு முறை 
  சிறுவனின் உள்ளங்கையில் 
  அடி விளாசிவிட்டார்.. 

●அடித்த பின் தான் கவனித்தார்,  
  அவர் அடித்தது 
  ஸ்பேனரை கொண்டு என்பதை.. 

●வலியில் துடித்த மகனை 
  மருத்துவ மனைக்கு 
  தூக்கி கொண்டு ஓடினார்..  

●சிறுவனுடைய கையில் 
  சில முக்கிய எலும்புகள் 
  முறிந்துவிட்டதால்,  
  "இனி விரல்களை 
  குணமாக்கமுடியாது" என்று 
  மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.. 

●மகன் வலி தாங்க முடியாமல்  
  சோகம் நிறைந்த கண்களுடன் 
  தன் அப்பாவை பார்த்து,  

●“அப்பா.. 
  என்னோட விரலுங்க 
  திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” 
  என்று கேட்டவுடன், 
  கண்களில் கண்ணீர் கொப்பளிக்க 
  மவுனமாக வெளியே வந்தார்.. 

●வெளியில் நின்றிருந்த காரை 
  பல தடவைகள் 
  எட்டி, எட்டி உதைத்தார்.. 
  
●தலையில் கையை வைத்துகொண்டு 
  காரின் அருகில் உக்கார்ந்து,
  அழுதுகொண்டு இருந்தார்.. 
  
●அப்பொழுதுதான் 
  அந்த கீரல்களை கவனித்தார்.,  
  ஏதோ எழுதியிருந்தது.. 
  உற்று கவனித்தார்.. 

●தன் மகனின் 
  பிஞ்சுக் கரங்களால்
  ஒரு வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.. 

●அந்த வாசகம் :
  "ஐ லவ் யூ அப்பா”.

[ மனிதர்களை பயன்படுத்துகிறோம்.,  
  பொருட்களை நேசிக்கிறோம்.. 

  எப்பொழுது,  
  மனிதனை நேசித்து, 
  பொருட்களை பயன்படுத்துகிறோமோ 
  அப்பொழுது தான் 
  மனிதம் வாழும்.. 
  மனிதனும் வாழ்வான் மனிதனாக.. ]

Svb-

അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല: